கன்னியாகுமரி : போலீசின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை.!
police enquiry for man murder case in kanniyakumari
கன்னியாகுமரி : போலீசின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த இவரது மனைவி குமாரி நாகர்கோவிலில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ஜெகதீஸ்க்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டும், குமாரியை அடிக்கவும் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குமாரி போலீசில் புகார் அளித்து விட்டு வழக்கம் போல் பணிக்குச் சென்றுவிட்டார்.
இதற்கிடையே, குமாரியின் கணவர் ஜெகதீசை விசாரணைக்கு வருமாறு காவல் நிலையத்தில் இருந்து நேற்று அழைத்துள்ளனர். இந்த நிலையில், குமாரி பணிமுடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது சமையலறையில் ஜெகதீஸ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், ஜெகதீஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police enquiry for man murder case in kanniyakumari