முருகநேரி பட்டாசு ஆலை விபத்தில்., மேலும் பலியான உயிர்கள்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
police case file muruganeri fire accident
விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள முருகநேரியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில், மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக இன்று தீவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் உயிர் இழந்து உள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மதுரை முருகநேரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர், போர்மேன் மீது 3 பிரிவுகளின் கீழ், மதுரை டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட போர்மேன் சுந்தரமூர்த்தி 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
police case file muruganeri fire accident