போலீசே போலீசிற்கு வைத்த ஆப்பு!! சாமி கும்பிட போய் சனியன் பிடித்தது., அடடா!!
police bought Bribery in erode
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டராக இருக்கும் பதி(47) பண்ணாரி மற்றும் திம்பம் வழியாக கர்நாடகா செல்லும் லாரிகளை பரிசோதனை செய்கிறேன் பேர்வழி டிரைவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு இருந்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மீது ஏராளமான புகார் வந்துள்ளது. இதனால், அவரை பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திட்டமிட்டு ஒரு வியூகம் வகுத்தனர். இதன்படி, அவர்கள் மாறுவேடத்தில் சென்று பதியை கையும் களவுமாக பிடிப்பதாகும்.
இரு டிரைவர், கிளீனர் போன்று வேடமிட்டு லாரியில் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.அங்கு காவல்துறை காரை தவிர்த்து தந்து சொந்த காரிலோ சென்று வாகன சோதனைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல போலிஸ் அதிகாரிகள் செல்லும் லாரியையும் மறித்து லஞ்சம் கேட்கவே, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர், மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உங்களிடம் விசாரிக்க வேண்டும் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று அழித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பதி தன்னுடைய சொந்த காரிலேயே வருவதாய் கூறினார். அதிகாரிகளும் நம்பிவிட காரில் பின் தொடர்ந்து வந்தவர் விபத்து எற்படுத்தி தப்பி ஓடிவிட்டார். இதனல், அவரது மீது விபத்து மற்றும் லஞ்சம் என இரு குற்றங்களுக்காக வழக்கு தொடரபட்டுள்ளது.
English Summary
police bought Bribery in erode