#வீடியோ: ரயில் நிலையத்தில் சுற்றிய மனநலம் சரியில்லாத பெண்.! காவலர் அத்துமீறல்.!
police attack girl in mayiladudurai railway station
நாகை மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து இருக்கின்றார். அந்த பெண்ணை ஆயுதப்படை காவலர் ஒருவர் சரமாரியாக அடித்து தாக்கி மண்டையை உடைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வீடியோவாக பரவி வருகின்றது.
ரயில்வே நிலையத்தில் இருந்த அந்தப் பெண்ணை வெளியேற்ற ஆயுதப்படை காவலர் துறையினர் முயற்சித்து இருக்கின்றனர். இரவு நேரத்தில் இவ்வாறு செய்ததால் அங்கு சர்ச்சை கிளம்பியது. இருப்பினும் ,அவரை காவல்துறையினர் வெளியேற்றினர்.
ஆனால், சற்று நேரத்தில் அந்தப் பெண் மீண்டும் ரயில்வே நிலையத்திற்கு உள்ளேயே சென்றார். இதன்காரணமாக ஆயுதப் படையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற காவலர் தன்னுடைய கையில் இருந்த லத்தியை வைத்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்து இருக்கின்றார்.
அப்போது அங்கே கூடியிருந்த பொதுமக்களில் ஒருவர் இதனை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தற்போது இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றது. அந்த பெண்ணை தாக்கிய காவலருக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
English Summary
police attack girl in mayiladudurai railway station