தஞ்சாவூர்: தலைக்கேறிய மது போதை... தாயை கொன்ற மகன்...! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் தாயை அடித்து கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அஞ்சலையம்மாள் (31).  இவர்  அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் பாவை நாதனுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவதன்று பாவை நாதன் மதுபோதையில் அவரது தாயிடம் தகராற்றில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலையம்மாள் ஏற்கனவே இருந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாவை நாதன் அவசர அவசரமாக இறுதிசடங்கு செய்ய முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பாவை நாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest son who killed mother under the influence of alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->