மாநில கல்லூரி மாணவர் தற்கொலை... பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது..! - Seithipunal
Seithipunal


மாநில கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குமார் இவர் மாநிலக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். குமார் கல்லூரிக்கு சென்றுவிட்டு புறநகர் ரயிலில் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பத்திற்கும் மேற்பட்ட குமாரை அழைத்து சென்றுள்ளனர்.

அவர்கள் அடித்து அவமானப்படுத்தியதால் குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முன் அவர் ஆடியோ ஒன்றையும் அனுப்பி இருந்தார். இதனை அடுத்து, தற்கொலைக்கு காரணமான மாணவர்களை  கைது செய்ய கோரி மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்ற மாணவரை கைது செய்தனர். மேலும் , தலைமறைவாக உள்ள பத்திற்கும் மேற்பட்ட  மாணவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest pachaiyappas College Student


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->