தனியாக வீட்டில் இருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. காமூகன் கைது..!
Police arrest man for Rapping Woman
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அவர்களின் வீட்டின் அருகே வந்த பாலசுப்பிரமணி என்பவருடன் அந்த இளம்பெண் நட்பால பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத போது அவரின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்தவற்றை கூற கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். நடந்தவற்றை கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனை அடுத்து, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பாலசுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Police arrest man for Rapping Woman