சிறுமியை காதலிக்க சொல்லி தொல்லை செய்த இளைஞர்..!! கைது செய்த காவல்துறை...!!
Police arrest man for harassing girls
+2 மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் திருப்பூர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அவர் +2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவியை தினமும் பின் தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளான். ஆனால் அந்த சிறுமி தனக்கு இதில் விரும்பமில்லை என கூறியுள்ளார்.
இதனை கேட்காமல் தினம் அந்த பெண்ணின் பின் சென்று அவரை தொல்லை செய்துள்ளார். இந்நிலையில், நேற்று அந்த மாணவியை வழிமறைத்து நீ என்னை காதலித்தே ஆக வேன்டும் என கூறி டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் பயந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து, அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து ரஞ்சிதை காவல்துறையினர் கைது செய்தனர்.
English Summary
Police arrest man for harassing girls