சிறுமியை காதல் போர்வையில் பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பன்.! தட்டிக்கேட்ட பெற்றோருக்கு குத்து விட்ட சம்பவம்.!
police arrest love harassment man
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 12 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை காதல் வலையில் விழுத்தி, பாலியல் கொடுமை செய்த சிறுமியின் சித்தப்பாவை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பேடரஅள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி, அதே அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த சிறுமிக்கு சித்தப்பா முறையிலுள்ள, அதே பகுதியை சேர்ந்த கேசவன் (வயது 21) என்ற நபர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று, காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அந்த சிறுமி, அவருடன் பல இடங்களில் ஊர்சுற்றி உள்ளார்.
மேலும், கேசவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் அறிந்த சிறுமியின் பெற்றோர், கேசவனை நேரில் சென்று கண்டித்துள்ளனர். அப்போது கேசவன் சிறுமியின் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர்.
மேலும், சிறுமியின் பெற்றோரை கேசவன் மற்றும் அவனுடன் சேர்ந்து அவனின் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், கேசவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய கேசவனின் உறவினர்கள் அழகேசன், பச்சைமுத்து, ஆனந்தன், கிருஷ்ணன், பச்சையப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
police arrest love harassment man