பெண்களின் புகைப்படத்தை தேடித்தேடி மாபிங்.. மிரட்டல்.. காவல்துறை அதிரடி.!!
Police arrest girl photo cheat in Ramanathapuram
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை அமைத்துள்ளார். இதன் மூலமாக பல்வேறு வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பரமக்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை முகநூலிலிருந்து திருடிய மர்ம ஆசாமி ஒருவன், ஆபாச படமாக மாபிங் செய்து அவரது கணவருக்கு அனுப்பி ரூ.20000 கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்து வந்தவன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பரமக்குடி ராமநாதபுரம் பகுதியை சார்ந்த ரோகித் என்பதும், இவன் குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களின் புகைப்படத்தை தேடி மாபிங் செய்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைப் போன்று, சென்னையில் உள்ள புதுபாக்கத்தை சார்ந்த பெண்ணொருவரின் இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படத்தை திருடிய மர்ம நபர் ஒருவர், அவரது கணவருக்கு அனுப்பி தனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்துமாறும் மிரட்டியுள்ளான். மேலும், பணம் செலுத்த மறுக்கும் பட்சத்தில் சமூகவலைதளத்தில் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சுகன்யா என்ற பெயரில் இயங்கி வந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கையும், இந்த கணக்கை இயக்கி வந்த உச்சிப்புளி பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவனையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். இணையதளத்தில் தற்போது மிரட்டல் குற்றங்கள் அதிகளவு நடைபெற்று வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Police arrest girl photo cheat in Ramanathapuram