மனைவியை அறிவாளால் வெட்டிய கணவர்.! பொள்ளாச்சி அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே மனைவியை அறிவாளால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பி.நாகூர் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் பார்த்தசாரதி (29). இவரது மனைவி சங்கீதா (25). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவியிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து சம்பவத்தன்று பார்த்தசாரதி சங்கீதாவை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, சங்கீதாவை தகாத வார்த்தையால் திட்டி அங்கிருந்து அறிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் அலறிய சங்கீதாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைப்பார்த்த பார்த்தசாரதி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வடக்குபாளையம் காவல் நிலையத்தில் சங்கீதா கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பார்த்தசாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are looking for the husband who hacked his wife in pollachi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->