திருப்பத்தூர்: எரிந்த நிலையில் ஆண் சடலம்., கொலை செய்யப்பட்டதா என விசாரணை..!!
Police are investigating the unidentified male corpse
எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், பல்லடம் அருகில் உள்ள பாச்சாங்காட்டு பாளையம் குட்டை அருகில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து, அந்த பகுதியில் சோதனை செய்தனர். அவர் யார் எப்படி இருந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தரார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police are investigating the unidentified male corpse