13 வயது சிறுமி மர்ம மரணம்., ஆடையில் படிந்த ரத்த கறை.! விசாரணையை துரிதப்படுத்தும் காவல்துறை..!!
Police are investigating the mysterious death of a 13-year-old girl
13 வயது சிறுமி மர்ம மரணம் குறித்து தனிபடை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், வில்லியனூரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 7 தேதி அதே பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை தேடி வந்தனர். ஆனால், அவர் எங்கும் காணவில்லை இதனை அடுத்து அவர்கள் சிறுமியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தனர்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காத சிறுமி மர்மமான முறையில் ஆடையில் ரத்தகறைகளுடன் மாமா வீட்டின் பின்புறம் உள்ள வாய்காலில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து சிறுமியின் மர்ம மரணம் குறித்து தனிபடை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுமியை வாய்காலில் இருந்து தூக்கி வந்ததால் அங்கு தடையம் எதுவும் கிடைக்கவில்லை மேலும் சிறுமியின் உறவினரகளிடம் இருந்தும் எந்த துப்பும் கிடைக்காததால் அந்த பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மட்டுமே அவர் எப்படி உயிரிழந்தார் என்ற உண்மை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police are investigating the mysterious death of a 13-year-old girl