மகள்களுடன் பிணமாக மிதந்த ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறு காரணமாக மகள்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் ஒரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகளின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஞானவேல் என்பதும் அவர் ஆட்டோ ஒட்டுநர் என்பதும் தெரியவந்தது.

அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரது மகள்களை அழைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.

எனவே குடும்பதகராற்றால் அவர் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமான என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are investigating the body of father and daughter found from the well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->