கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது ஏற்பட்ட விபரீதம்..விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி.!
Poison gas Attack 2 peoples death perungudi
பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பி உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்ட வந்தனர். அப்போது 2 தொழிலாளர்களையும் விஷவாயு தாக்கியது.
இதனை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் சிக்கி இருந்த 2 தொழிலாளர்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவரும் தற்போது உயிரிழந்து உள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்த உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெருங்குடி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Poison gas Attack 2 peoples death perungudi