உச்சகட்ட கோபத்தில் மருத்துவர் ராமதாஸ்.! "மன்னிப்பே வேண்டாம்." அனல் பறக்கும் ட்வீட்.!
pmk ramadoss angry tweet
வேலூர் அருகே 15 வயது பள்ளி சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் அந்த சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும், அந்த காமுகங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், "வேலூர் அருகே 3 மனித மிருகங்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி தீக்குளித்த 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவியைத் தவறாக படம் பிடித்து பாலியல் இச்சைக்கு இணங்கும்படி அச்சுறுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள். மிருகங்களுக்கு இணையான மிகக்கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!” என்றுஅவர் தெரிவித்துள்ளார்.