கிராமங்கள் பாமகவின் கோட்டை - ஜி.கே மணி அதிரடி பேச்சு.!
PMK President GK Mani Speech at Ranipet Local Body Election 2 Oct 2021
வீடு தவறாமல் சென்று அனைவரும் வாக்குகளை சேகரிக்க வேண்டும். கிராமங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக இருக்கிறது என தலைவர் ஜி.கே மணி பேசினார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக தலைவர் ஜி.கே மணி உறையற்றுகையில், " இந்த கூட்டத்திற்கு வந்துள்ள பொதுமக்கள், காவல் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் என அனைவருக்கும் வணக்கம்.
உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட மக்களாகிய இராணிப்பேட்டை மக்களிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். உள்ளாட்சி தேர்தல் என்பது மிக முக்கிய தேர்தல். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை உடனடியாக அறிந்து தீர்த்து வைப்பது உள்ளாட்சி நிர்வாகிகள் மட்டுமே. அதனால் தான் உள்ளாட்சிக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் அய்யாவும், மருத்துவர் அன்புமணியும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தனித்து காலம்காண்கிறோம். இது கிராமத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான தேர்தல். கிராமங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக இருக்கிறது. கிராமங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை. பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அமோக வெற்றியை பெற்று தர வேண்டும்.
மருத்துவர் இராமதாஸ் சாதாரண தலைவர் இல்லை. சமூக நீதிக்காக பெரியாருக்கு பின்னர் போராடும் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா தான். வீடு தவறாமல் சென்று அனைவரும் வாக்குகளை சேகரிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி சேவை செய்வதற்கு வந்துள்ளது. உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்று கேளுங்கள். இந்த தேர்தலை மனமாற்றத்தின் மூலம் வெற்றி பெற உழைக்க வேண்டும் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK President GK Mani Speech at Ranipet Local Body Election 2 Oct 2021