திருவண்ணாமலை பாமக நிர்வாகி பலி.! கார் - லாரி நேருக்கு நேர் மோதல்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் வெளுக்கனந்தலை சேர்ந்த மண்ணுகாசி - பூமல்லி என்ற தம்பதியினருக்கு திருமுருகன் (வயது 37) என்ற மகன் இருக்கின்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். 

திருமுருகன், பாமக

இன்று காலை திருமுருகன் காவேரிப்பாக்கத்தில் இருந்து 2 பேருடன் காரை தானே ஒட்டியவாறு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஆரணி அடுத்த கீழ்அய்யம்பேட்டை என்ற இடத்தில் வரும்போது லாரி ஒன்று எதிரே வந்துள்ளது. அப்போது கார் கட்டுப்பாடின்றி சென்று லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது. 

பலத்த சத்தத்துடன் மோத காரின் இடிபாடுகளில் சிக்கிய திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி சாலையோரத்தில் கவிழ்ந்துள்ளது. கார் மற்றும் லாரியில் வந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. 

இதனை தொடர்ந்து விரைந்து வந்த களம்பூர் காவல்துறையினர் விபத்தில் இறந்த திருமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பாமகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk politician death in thiruvannamalai accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->