இத்தனை பதவிகளையும் ‘ஒரு பைசா கூட செலவின்றி வென்றிருக்கிறார்கள் - மருத்துவர் இராமதாஸ்.!
PMK Founder Ramadoss say about Local body election victory
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாமக நிறுவனருமான மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அதில், எல்லோரும் கொண்டாடுவோம்,
காந்தியடிகளின் பெயரைச் சொல்லி,
ராஜிவ் காந்தியின் சட்டத்தைச் சொல்லி
எல்லோரும் கொண்டாடுவோம்!
காந்தி கனவு கண்டது கிராம சுயராஜ்யம்...
ராஜிவ் கொண்டு வந்ததுபஞ்சாயத்து ராஜ்யம்
இரண்டும் தழைத்து செழித்திடவே தமிழகத்தில்
ஜனநாயகம் கடுமையாக உழைக்கிறதே!
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 140 பதவி
ஒன்றியக் குழு உறுப்பினர் 1381 பதவி
இத்தனை பதவிகளையும் ‘ஒரு பைசா கூட
செலவின்றி வென்றிருக்கிறார்கள் என்றால்
ஜனநாயகம் ’ஓங்கி’ வளர்ந்து விட்டதாகத் தானே அர்த்தமாகும்!
இனி காந்தியின் கிராம சுயராஜ்ய கனவு நனவாகும்
ராஜிவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ்யம் செழிக்கும்
ஆகவே இன்னொருமுறை எல்லோரும் சொல்லுங்கள்...
‘காந்தி, ராஜிவ் பேரைச் சொல்லி எல்லோரும் கொண்டாடுவோம்’ என்று அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Founder Ramadoss say about Local body election victory