பாட்டாளி சிங்கங்களை வெற்றிவிழாவில் சந்திக்கிறேன் - மருத்துவர் இராமதாஸ்.!
PMK Dr Ramadoss Wish to Meet PMK Supporters After Election 2021
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் நாம் அமோக வெற்றியடைய வேண்டும். பாட்டாளி சிங்கங்களை காண நான் ஆவலாக இருக்கிறேன். வெற்றிவிழாவில் வருகிறேன் என்று மரு. இராமதாஸ் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஜெயங்கொண்டம் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " நல்ல கூட்டணி, நல்ல வேட்பாளர், நல்ல திட்டங்கள்.. இதற்கு மேல் நமக்கு என்ன வேண்டும். திமுகவின் நகலெடுத்த தேர்தல் அறிக்கையிலும் தெளிவு இல்லை. சட்டமன்றத்தில் பாலுவின் குரல் கேட்க வேண்டும். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாராளுமன்றத்திலேயே உணவு கொடுக்கும் விவசாயி தெய்வம் என்று முழங்கினார். விவசாயிகளின் குரலை அங்கு பதிவு செய்தார்.
திமுக என்றாலே பொய் மூட்டைதான். சிறந்த பொய் மூட்டையாக திமுகவினர் தெரிவிப்பார்கள். அந்த பொய்யாய் நம்பிவிடவேண்டாம். தன்னாலே தான் கெட்டான் என்ற பத்மாசுரன் கதையை நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். திமுகவிற்கு நீங்கள் வாக்களித்தால், வரன் கொடுத்தவர் தலைமேல் கை வைத்த கதைபோல ஆகிவிடும்.
திமுகவிற்கு வாக்களித்துவிட்டால் உங்களின் தலைமேல் கைவைத்து நாட்டினை குட்டிசுவராக்கி விடுவார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் நாம் அமோக வெற்றியடைய வேண்டும். பாட்டாளி சிங்கங்களை காண நான் ஆவலாக இருக்கிறேன். வெற்றிவிழாவில் வருகிறேன் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Wish to Meet PMK Supporters After Election 2021