மருத்துவர் சண்முகப்பிரியா மறைவு.. வீரவணக்கத்துடன் மனமிழகி இரங்கல் தெரிவித்த மருத்துவர் இராமதாஸ்.!!
PMK Dr Ramadoss Regret to Madurai Govt Hospital Dr Shanmuga Priya 9 May 2021
மதுரை அனுப்பானடி அரசு பெண் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த விஷயத்தில், மருத்துவர் இராமதாஸ் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
மதுரை மாநகராட்சி அனுபாண்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகப்பிரியா (வயது 31). இவர் 8 மாத கர்ப்பிணியாக தற்போது இருக்கிறார். கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா, தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.
மேலும், 8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் சக மருத்துவர்கள் மற்றும் அவரது உறவினர்களையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். 8 மாதங்களாக கருவுற்றிருந்த நிலையிலும், கொரோனா அச்சத்தை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்றிய ஈகியர் அவர். அவருக்கு எனது வீரவணக்கம் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Regret to Madurai Govt Hospital Dr Shanmuga Priya 9 May 2021