மாவீரன் குரு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.. மருத்துவர் இராமதாசு மரியாதை..!!
PMK Dr Ramadoss Memorize Vanniyar Sangam Leader Maveeran J Guru
மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மாவீரன் குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அவரது உருவப் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், துணைப் பொதுச்செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோரும் மாவீரன் குரு அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல், கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரன் குரு சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. இதனைப்போன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சமூக மக்கள் தங்களின் பகுதிகளில் சமூக இடைவெளியுடன் குருவின் புகைப்படத்திற்கு மரியாதையை செலுத்தினர்.
Tamil online news Today News in Tamil
English Summary
PMK Dr Ramadoss Memorize Vanniyar Sangam Leader Maveeran J Guru