டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியர்கள் பதக்கங்களைக் குவிக்க அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்கள்..! - Seithipunal
Seithipunal


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்க, பதக்கங்களைக் குவிக்க  வாழ்த்துகள் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.  இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 56 வீராங்கனைகள் உள்ளிட்ட 127 வீரர்களும் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் இந்திய அணியினர் பங்கேற்கின்றனர். பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு!

தமிழ்நாட்டிலிருந்து இம்முறை 12 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தொடர் ஓட்டம், கத்திச்சண்டை, டேபிள் டென்னிஸ், படகுப்போட்டி,  துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Wish to Tokyo Olympics Indian Team 23 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->