தமிழக மக்களுக்கு கலைஞர் செய்த துரோகங்கள் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.!
PMK Dr Anbumani Ramadoss Talks about Karunanithi Opposition TN Peoples 4 April 2021
காவேரி விவகாரத்தில் கலைஞர் செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசினார்.
கும்பகோணம் தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து சோழபுரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், "
சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில், கருணாநிதியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காவேரி விவகாரத்தில் கலைஞர் செய்த துரோகத்தை பேச 2 மணிநேரம் வேண்டும். கர்நாடக மாநிலத்தில் 4 அணைகள் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. திமுக தமிழக மக்களுக்கு இவ்வாறாக பல துரோகங்கள் செய்துள்ளது.
தற்போது மு.க ஸ்டாலின் காவேரியை மீட்டெடுப்போம் என்று நாடகமாடி வருகிறார். இதே மு.க ஸ்டாலின் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். டெல்டா பகுதியில் புண்ணிய பூமி, விவசாயியாக வாழ்ந்து சோறு போடும் பூமி இது.
இப்போது மக்களிடம் மீத்தேன் திட்டத்திற்கு தெரியாமல் கையெழுத்துப்போட்டேன் என்று தெரிவிக்கிறார். திமுக கொண்டு வந்த பெட்ரோல் கெமிக்கல் திட்டத்தையும் அதிமுக தலைமையிலான அரசு இரத்து செய்துள்ளது. அதற்காக நாம் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Anbumani Ramadoss Talks about Karunanithi Opposition TN Peoples 4 April 2021