கடலூர் மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும், என் தம்பிகள் வளர்ச்சிபெற வேண்டும் - மரு. அன்புமணி.!
PMK Dr Anbumani Ramadoss Election Campaign at Cuddalore Panruti 30 March 2021
எனது தம்பிகள் மீது எந்த வழக்கும் வரக்கூடாது, கடலூர் மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
பண்ரூட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.இராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில்,
" திரு.இராஜேந்திரன் ஒரு விவசாயி. அவருக்கு வழிப்பறி, கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் என்றால் என்ன என்று தெரியாது. மிகவும் சிறந்த வேட்பாளர். பண்பான வேட்பாளர். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்துள்ள அதிமுக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், த.மா.கா நிர்வாகிகள், பிற கூட்டணி கட்சியினர், எனது அன்பு தங்கைகள், தம்பிகள், வாக்காள பெருமக்கள், பாட்டாளிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு அன்புமணியின் அன்பு வணக்கம்.
பண்பான நமது விவசாயி இரா.இராஜேந்திரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். எனது தம்பிகள் மீது எந்த வழக்கும் வரக்கூடாது. கடலூர் மாவட்டம் அமைதியாக இருந்து, வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எனக்கு நோக்கம் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Anbumani Ramadoss Election Campaign at Cuddalore Panruti 30 March 2021