நள்ளிரவில் உறங்கிய பெற்றோர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன்.. பெரம்பலூரில் பேரதிர்ச்சி..!!
Perampalur man murder parents police investigation
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தை சார்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவியின் பெயர் செல்லம்மாள் (வயது 65). இவர்களது மகனின் பெயர் ரமேஷ் (வயது 35). இவர் காலையில் அவரது வீட்டின் மாடியில் இரத்தம் படிந்த அரிவாளுடன் நின்று, யாரும் அருகில் வந்தால் கொலை செய்து விடுவேன் என்று கூறிஉள்ளார்.
இதனால் பயந்துபோன பொதுமக்கள் அவரை ஒன்று சேர்ந்து விரட்டிய நிலையில், வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில் இராமசாமி மற்றும் செல்லம்மாள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்துடன் இருந்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், அரிவாளுடன் இருந்த ரமேஷையும் கைது செய்தனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலைக்கான காரணம் சரிவர தெரியவில்லை.
மேலும், கடந்த சில மாதமாகவே ரமேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்களுடன் தகராறில் ஈடுபடவே, தனது தாய் மற்றும் தந்தையை அடிக்கடி கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இந்த விஷயத்திற்கு உள்ளாகவே இந்த கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Perampalur man murder parents police investigation