பெரம்பலூர் மாவட்டத்தை அதிரவைத்த கொடூர தாய்.! வெறும் 70 ரூபாய்க்காக இளம் தளிர் துடிதுடித்து மரணம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே 70 ரூபாய் பணம் திருடியதற்காக, 10 வயது சிறுமியை பெற்ற தாயே கொடூர தண்டனை கொடுத்ததால், சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் - மணிமேகலை என்ற தம்பதிக்கு மகாலட்சுமி என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில், வீட்டின் அருகில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் 70 ரூபாய் பணம் திருடியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்களிடம் உறவினர்கள் தெரிவிக்கவே., சிறுமிக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்த சிறுமியின் தாய், சிறுமியின் வாயிலும், வலது தொடையிலும் சூடு சூடு வைத்துள்ளனர்.

மேலும் மிளகாய்ப் பொடியை புகைபிடிக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் கடந்த 6ஆம் தேதி அரங்கேறி உள்ளது.

இந்த கொடூர தண்டனை காரணமாக சிறுமிக்கு உடல் நிலை மோசமானதால், அருகில் உள்ள மெடிக்கலில் மருந்து வாங்கி குணப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாகவே, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், சிறுமி மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணம் குறித்து அரும்பாவூர் காவல் நிலைய போலீசார், மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perampalor littele girl dead for punishment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->