முதலாளியின் உடலை சுற்றிச்சுற்றி வந்த பாசமிகு நாய்.. பெரம்பலூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


மின்னல் தாக்கி உயிரிழந்த தனது எஜமானரின் உடலைப் பார்த்து வளர்ப்பு நாய் அங்கேயே சுற்றி வந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று மாலை ஆடு மேய்க்கச் சென்ற சமயத்தில், எதிர்பாராத விதமாக தாக்கிய மின்னலில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து வீட்டு வாசலில் ராமச்சந்திரனின் உடலை கிடத்தி உறவினர்கள் சுற்றி நின்று கதறி அழுது கொண்டிருந்த நிலையில், ராமச்சந்திரன் ஆசை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்றும் அவரது சடலத்தை சுற்றிவந்தது. 

மேலும், நாயும் ராமச்சந்திரனின் உடலை சுற்றி வந்து, அவரை அன்போடு எழுப்பி பார்த்தது. ராமச்சந்திரனின் உடல் மீது ஏறி இறங்கியும் அது பரிதவித்த நிலையில், இதனைக்கண்ட உறவினர்கள் மேலும் பெரும் சோகத்திற்கு உள்ளாகி கதறியழுதனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Man Death Lightening Attack dog Feeling sad Relations Cry 6 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->