#Breaking: பெரம்பலூர் சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை விவகாரத்தில், முன்னாள் திமுக எம்.எல்.ஏ விடுதலை.!!
Perambalur Ex DMK MLA Rajkumar release Kerala child girl sexual abuse and murder case
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ராஜ்குமார் வீட்டில் பணியாற்றி வந்த கேரள சிறுமி, கடந்த 2012 ஆம் வருடத்தில் எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அவரது ஓட்டுநர், நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தி.மு.க எம்.எல்.ஏ ராஜ்குமார், ஓட்டுநர் மகேந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ கூறிவந்த நிலையில், முன்னதாக வழங்கப்பட்டு இருந்த 10 வருட சிறை தண்டனைக்கு எதிராக மேல் முறையீடும் செய்யப்பட்டது.
இதுகுறித்த மேல்முறையீடு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சரிவர சமர்பிக்கப்படவில்லை என்று கூறி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 10 வருட சிறைத்தண்டனையை ரத்து செய்தும், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரை விடுதலை செய்வதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Perambalur Ex DMK MLA Rajkumar release Kerala child girl sexual abuse and murder case