பெரம்பலூர் அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் அதிர்ச்சி.! நகைக்கடையில் மர்மகும்பலின் வேலை.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே நகை கடை ஒன்றில் நகை வாங்குவது போல நடித்து சுமார் ஒன்றரை கிலோ மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகளை திருடிய திருட்டு கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவர் வாலிகண்டபுரத்தில் ரஹமத் ஜுவல்லரி என்ற பெயரில் ஒரு நகை கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்கு 4 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. 

அவர்கள் 6 பேரும் இப்ராகிமின் கடையில் நகை வாங்குவது போல நடித்து, இப்ராஹிம் மற்றும் விற்பனையாளராக வேலை பார்க்கும் பத்மபிரியா அவரின் கவனத்தை திசை திருப்பி 75 ஆயிரம் மதிப்புமிக்க ஒன்றரை கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடிக்கொண்டு தப்பி இருக்கின்றனர்.

இதுகுறித்து இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய அந்த கும்பலின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur district robber in jewelery shop


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->