கள்ளகாதலியுடன் ஊர் ஊராக சுற்றி உல்லாசம்.. கடைசியில் பாய்சன்?.. பெரம்பலூரில் அதிர்ச்சி..!
Perambalur Affair Couple Suicide Attempt Mystery Police Investigation
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் தனியார் தங்கும் விடுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தம்பதிகள் அறையெடுத்து தங்கியுள்ளனர். இவர்கள், அங்கிருந்து அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்த நிலையில், இன்று நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி பார்க்கையில், அது தாழிடப்படாமலேயே இருந்ததால் கதவு திறந்துள்ளது. உள்ளே சென்று பார்க்கையில், தம்பதிகள் இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி இருந்துள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது, பெண் உயிரிழந்ததும், ஆண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆண் நபரை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய துவங்கினர்.
இந்த விசாரணையில், சென்னையில் உள்ள கே.கே நகரை சார்ந்த மகேந்திரன் (வயது 45) என்பதும், இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், உயிரிழந்த பெண்மணி திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரை சார்ந்த பூங்கொடி என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சென்னையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
பணி நிமித்தமாக மகேந்திரன் உணவகத்திற்கு சென்ற நிலையில், பூங்கொடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, பொங்கல் விடுமுறைக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி பெரம்பலூரில் ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்த விஷயம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியந்துள்ளது.
இதனை இருதரப்பு குடும்பத்தாரும் கண்டித்ததால், மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி மதுவில் விஷம் கலந்த குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளது. இந்த மனுவில் பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆண் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால், விஷம் குடித்த விஷயத்தில் மகேந்திரனிற்கு பெரிய அளவிலான விஷ பாதிப்புகள் தென்படாததால், காவல் துறையினர் மகேந்திரனை சந்தேக வளையத்தில் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Perambalur Affair Couple Suicide Attempt Mystery Police Investigation