தினகரன் கட்சியில் இணையும் மாற்று கட்சியினர், எங்கு தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுக்கட்சியினர் கழக பொதுச்செயலாளர் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடக்கிறது என அமமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் தலைநிமிர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதற்குத் தொடர்ந்து பாடுபடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாற்று இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அணி அணியாக தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வருகிற 04.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி அளவில்  வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

கழகப் பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, வட்டம், கிளைக்  கழகங்களைச் சார்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தலைமைக்கழக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people join in ammk from other parties


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->