தொடரும் மரணம், கண்பார்வை இழப்பு.! முறைகேடான செயலால் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த விபரீதம்!! வெளியான அதிர்ச்சி சம்பவம்!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம், பாராபங்கி மாவட்டம் ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மது கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சமீபத்தில் ராம்நகர் பகுதியை சுற்றியுள்ள  கிராமத்தில் வசிப்பவர்கள், தொழிலாளர்கள் என பலரும் சாராயம் குடிப்பது வழக்கம். அவ்வாறு அன்றும் அங்கு விற்கப்பட்ட கள்ளசாராயத்தை பலரும் வாங்கி குடித்துள்ளனர்.

ஆனால் குடித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைவரும் வாந்தி எடுத்துள்ளனர். மேலும்  பலரும் மயக்கமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கபட்ட அனைவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 10 பேருக்கு மேல் கண்பார்வை இழந்துள்ளனர்.  35க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான மதுக்கடையில் கள்ளச்சாராயம் விற்பதை தடுக்காத கலால் துறை அதிகாரிகள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட பல குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும் அறிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people dead by drinking poisioned liquor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->