சட்டப்பேரவை தேர்தல் 2021: பாமக தலைவர் ஜி.கே மணி பரபரப்பு பேட்டி.!
Pennagaram PMK Candidate GK Mani Pressmeet after Voting 6 April 2021 TN Election 2021
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அஜ்ஜனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளரும், பா.ம.க தலைவருமான ஜி.கே.மணி தனது வாக்குகளை பதிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் ஜி.கே மணி, " நான் பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 10 வருடம் பென்னாகரம் தொகுதி மக்களுக்காக உழைத்துள்ளேன். அவர்களுக்கான சட்டமன்ற உறுப்பினராக 10 வருடம் பணியாற்றியுள்ளேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை இந்த தொகுதி சம்பந்தம் இல்லாதவர் என்று கூறி விமர்சனம் செய்கிறார்கள். அது இருந்துவிட்டு போகட்டும். அரசியலில் இதுபோன்ற விமர்சனங்கள் இருக்கும். அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெரும். அதிமுக - பாமக - பாஜக - த.மா.கா மற்றும் பிற அதிமுக கூட்டணி காட்சிகள் அமோக வெற்றிபெற்று, அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pennagaram PMK Candidate GK Mani Pressmeet after Voting 6 April 2021 TN Election 2021