ஆற்றில் குளித்த ஊராட்சி செயலாளர்.! நீரில் மூழ்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி ஊராட்சி செயலாளர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சவேரியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(46). இவர் மேல்சிறுவள்ளூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நண்பர்களுடன் மூங்கில்துறைபட்டுப் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஆரோக்கியதாசை இறந்த நிலையில் ஆற்றில் இருந்து பிணமாக மீட்டனர்.

இதையடுத்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panchayat secretary drowned in river in kallakurichi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->