மூட்டை மூட்டையாக, மறைத்துவைத்திருந்த போதை பொருள்..! அதிர்ச்சி பின்னணி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், சேலம் மாவட்ட ஆத்தூரில் வீடு மற்றும் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஆத்தூரில், வீரகனூர் ராயபுரம் என்னும் பகுதியில் குமரன் என்பவரது தோட்டத்திற்கு சில மாதங்களாகவே சந்தேகம் படும்படியான வாகனங்கள் வந்து போவதாக தகவல் வந்துள்ளது.

இதை தொடர்ந்து, போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வேனை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அதனுள் 34 மூட்டைகள் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அந்த வாகனம் நிறுத்தப்பட்டு இருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 மூட்டைகள் மற்றும் 80 அட்டைப் பெட்டிகளில் பான்மசாலா குட்கா ஆகிய பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

மேலும், கூடுதலாக ஒவ்வொரு அட்டைப் பெட்டியிலும் 5 கிராம் எடை கொண்ட வெள்ளிக் காசுகளும் இருந்துள்ளது. இந்தப் பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று சோதனை செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

மேலும், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pan masala stocking in salem attur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->