நள்ளிரவில் மண்டை ஓடை வைத்து,தெருவில் நடந்த பூஜை.! அதிகாலையில் கிளம்பிய பீதி.!
palani peoples afraid on early morning
பழனியில் இருக்கும் ஒரு தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் எலும்புக்கூடுகளை வைத்து சென்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட தேவாங்கர் தெருவில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மனித உடலின் எலும்பு பாகங்களை மற்றும் மண்டை ஓடுகளை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்து விட்டு சென்றுள்ளனர். இரவு உறங்கி விட்டு அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து பார்த்த மக்களுக்கு இந்த எலும்புக் கூடுகளை கண்டு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை பீதியடையச் செய்ய இது போன்ற செயல்களை யாராவது செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் எலும்புக் கூடுகளில் மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைத்து பூஜை செய்ததற்கான தடயங்கள் தென்படுகின்றது. இதனால், அப்பகுதி மக்கள் பில்லி, சூனியம் போன்ற ஏதாவது இருக்குமோ என்று பீதியில் உறைந்து இருக்கின்றனர்.
English Summary
palani peoples afraid on early morning