இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல்., எல்லையில் பதற்றம்!
pakistan army attack india
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாடுகோடு பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காலை 10 மணியளவில் பாலகோட், மாங்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
பூஞ்ச் ராணுவ நிலைகளையும் அங்கிருந்த கிராமங்களையும் குறிவைத்து சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதுடன், துப்பாக்கிகளாலும் சுட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இதையயடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கிராம மக்கள் தரப்பில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் பூஞ்ச் காவல்துறை இணை ஆணையர் ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார்.
English Summary
pakistan army attack india