அறுந்த மின்வயரை சரி செய்ய முயன்ற பெயிண்டர்.! மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் அறுந்து மின்வயரை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் நாகராஜ் (33). இவர் நேற்று மாலை வீட்டில் மின்வயர் அருந்து இருந்ததால், அதனை சரி செய்ய முயன்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கி நாகராஜ் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து நாகராஜை உடனே மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாகராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் போலீசார் நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painter killed by electrocution in tiruvallur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->