ஓனரை அடித்து கொன்ற வடமாநில புள்ளிங்கோ'S ! அம்பத்தூரில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி அருகே ஆனந்தன் என்பவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மோல்டிங் செய்யும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் அதிமுக பிரமுகர் ஆவர். கம்பெனியை ஆனந்தன் மகன் பிரபாகரன் நடத்தி வருகின்றார். இந்நிலையில் பிரபாகரன் சில நாட்களுக்கு முன்பு மோல்டிங் கம்பெனியில் சடலமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் களமிறங்கிய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொலை நடந்த தினத்தில் வடமாநில இளைஞர்கள் அங்கிருந்து ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்து விசாரித்ததில், கடந்த ஆண்டு தான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. 4மாதத்தில் குழந்தையும் இருக்கின்றது. இவரது கம்பெனியில் வேலை செய்த வடமாநில இளைஞர்களுக்கும், பிரபாகரனுக்கும் பண தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர்கள் பிரபாகரனை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த வடமாநில கும்பல் குறித்து விவரங்கள் எதுவும் தெரியவில்லை, காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

owner killed in ambattur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->