கண்டித்த பெண் ஆசிரியை.. கன்னத்தில் அறைந்து 11-ஆம் வகுப்பு மாணவர் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளி மாணவர் ஆசிரியையின் கன்னத்தில் அரைந்துள்ள சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே மாசிநாயகனபள்ளி பகுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியை ஒருவர் 11ஆம் வகுப்பு மாணவரை ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை முன்னிட்டு கண்டித்திருக்கிறார். 

அப்பொழுது மாணவன் எதிர்த்துப் பேசியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 11 ஆம் வகுப்பு மாணவர் அரசு பள்ளி ஆசிரியையை வேகமாக அறைந்து கீழே தள்ளியுள்ளார். இதனால் வகுப்பறையில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் ஆகியவை சம்பந்தப்பட்ட மாணவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Osur reached attacked by student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->