விபத்துக்கு கண் திருஷ்டி தான் காரணம்.! ஆட்டுக்குட்டியால் திருஷ்டி கழித்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரும் இவரது சகோதரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தனர். அதில் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில், முருகனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். முருகனுக்கு ஏற்பட்ட இந்த விபத்திற்கு பலரின் கண் திருஷ்டி தான் காரணம் என்று அவரின் உறவினர்கள் நம்பினர். 

இதையடுத்து, முருகன் திருமணம் ஆகாதவர் என்பதால் அவரது குல வழக்கப்படி அவரின் உறவினர் மருத்துவமனைக்கே ஆட்டுக் குட்டியை கொண்டுவந்து அவருக்கு திருஷ்டி சுத்தி பலியிட்டனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

osoor government hospital patient relatives remove eye thristi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->