அந்த தண்ணி என்னது இல்லை பாணியில், பரபரப்பு விளக்கம் அளித்த தேனி நிர்வாகி.!! - Seithipunal
Seithipunal


தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லசிபெற்ற முதல்வர் ஓ.பி.எஸ் என்றும் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் என்பது போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே இதற்கு முன்னதாக ஓ.பி.எஸ் பெயரில் போஸ்டர் ஒட்டி பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது இது குறித்த பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானிடம் கேட்கப்பட்டது. 

இது குறித்து அவர் தெரிவிக்கையில், " ஓ.பி.எஸ் அவர்களுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டருக்கும், தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், தனிப்பட்ட நபர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதாகவும் " விளக்கம் அளித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Poster issue Theni Member Explain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->