அதிமுக நிர்வாகி மாரடைப்பால் திடீர் மரணம்! கண்ணீருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் அதிமுக நிர்வாகி மரணத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ பன்னீர்‌ செல்வம்‌,  இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், "கடலூர்‌ மேற்கு மாவட்டம்‌, மங்களூர்‌ தெற்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளரும்‌, ஊராட்சி ஒன்றியக்‌ குழு முன்னாள்‌ தலைவருமான  கந்தசாமி அவர்கள்‌ மாரடைப்பால்‌ மரணமடைந்துவிட்டார்‌ என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்‌.

கழகத்தின்‌ மீதும்‌, தொடர்ந்து கழகத்‌ தலைமையின்‌ மீதும்‌ மாறாத விசுவாசம்‌ கொண்டு கழகப்‌ பணிகளை திறம்பட ஆற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு  கந்தசாமி அவர்களை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கு இந்தத்‌ துயரத்தைத்‌ தாங்கிக்‌ கொள்ளக்கூடிய சக்தியையும்‌,

தைரியத்தையும்‌ அளிக்க வேண்டும்‌ என்றும்‌; அன்னாரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாறவும்‌ எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறோம்‌" என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக இரங்கல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS and EPS mourning to ADMK former Union Chairman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->