பார்த்திபன் வருகிறார், தாலி கட்ட போன மணமகனை காத்திருக்க சொன்ன மணமகள்! பரபரப்பு வீடியோ! எங்கே செல்கிறது தமிழ்நாடு?! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, தாலி கட்டும் நேரத்தில், காதலன் தன்னை அழைத்துச் செல்ல வருவதாக மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மட்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். ஆனந்த்க்கும் அதே பகுதியை சார்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டார்கள் முன்னிலையில்  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. 

கொரோனா  காரணமாக, எளிமையான முறையில் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறவிருந்தது. அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் நிறைவுபெற்று மணமகன் தாலி கட்டச் சென்றபோது, அவரை தடுத்த மணமகள் மணமேடையில் இருந்து எழுந்து, தன்னை அழைத்துச் செல்ல காதலன் பார்த்திபன் வர உள்ளதாக கூறினார். இதனை கேட்ட மணவிழாவிற்கு வந்தவர்கள் பதறிப்போனார்கள்.  

பின்னர் பிரியதர்ஷினி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அங்கு பார்த்திபன் என்பவரை காதலித்தது தெரியவந்தது. பிரியதர்ஷினியிடம் பலரும் பேசிப்பார்த்து பலனில்லை. இதனால், திருமணம் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty Marriage issue on last Minute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->