இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
only school holiday for heavy rain
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்தது.
இந்தநிலையில், அரியலூர் மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், அரியலூர் மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அதே போல திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை பெய்வதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
சென்னை, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது.
English Summary
only school holiday for heavy rain