அவசரத்திற்காக ஆன்லைனில் கடன் பெற்று தற்கொலை செய்த வாலிபர்.. கண்ணீரை ஏற்படுத்தும் சோகம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பழையனூர் சாலை கிராமத்தைச் சார்ந்தவர் விவேக் ரங்கநாதன். இவர் மாமண்டூர் பகுதியில் இருக்கும் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக, தனது தந்தையின் மருத்துவச் செலவுக்காக GETRUPEE.COM என்ற இணையத்தின் வழியே ரூபாய் 4000 பணத்தை கடனாக பெற்றுள்ளார். 

இந்நிலையில், கடனை திருப்பி கேட்டு அந்த நிறுவனத்தின் சார்பாக தொல்லை கொடுத்து வந்த நிலையில், அலைபேசியில் யாரிடம் அதிகமாக பேசுகிறீர்கள் என்பதை பார்த்து அவர்களிடம் தகவலை தெரியப்படுத்த அசிங்கப்படுத்தி விடுவோம் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். 

இந்த மிரட்டலுக்கு பயந்து போன விவேக், தனது அலைபேசியில் சுவிட்ச் ஆப் செய்து வைத்த நிலையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அலைபேசிக்கு விவேக் கடன் வாங்கி விட்டு தலைமறைவாகி விட்டதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான விவேக், அவமானம் தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னதாக ஆன்லைன் நிறுவனம் குறித்து மனவேதனையுடன் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், அவமானம் தாங்காது தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேற்கூறியுள்ள நிறுவனத்திடம் கடன் தொகை பெற வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online Getrupee loan Website Torture Youngster Suicide in Chengalpattu 22 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->