#சென்னை : ஆன்லைன் வகுப்பில் திடிரென வந்த வீடியோ., அரண்டு போன மாணவர்கள்.! காவல்நிலையத்தில் புகார்.!
ONLINE CLASS SOME WORST VIDEO
ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியரை அதிரடியாக போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது, ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் மாணவ -மாணவ மாணவியர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருமங்கலம் தனியார் பள்ளியின் ஆன்லைன் வகுப்பில் கணித ஆசிரியர் மதிவாணன் என்பவர் ஆபாச வீடியோ அனுப்பியது உறுதியானது.
இதனையடுத்து, ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் மதிவாணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
ONLINE CLASS SOME WORST VIDEO