தமிழகத்திலும் வெங்காய திருடன்! வெங்காயத்தையும், திருடனையும் தேடும் போலீஸ்!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் காய்கறி கடையில் 60கிலோ வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தததையடுத்து மயிலாடுதுறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத்தெருவில் காய்கறிக்கடையில் நேற்றிரவு கொள்ளை நடைபெற்றுள்ளது.

 

மயிலாடுதுறை டபீர் தெருவை சேகர் என்பவருக்குச் சொந்தமான காய்கறிக்கடையில் 60 கிலோ வெங்காயம் மற்றும் காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 3 செல்போன்கள் திருட்டுப் போயின. மேலும், 3 மூட்டை வெங்காயம் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் தப்பியது. 

தற்போது, மயிலாடுதுறையில் வெங்காயம் ரூ.150 வரை விற்கப்படுகிறது. எனவே, வெங்காயம் கொள்ளைபோன சம்பவம் இப்பகுதி வர்த்தகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேட்டி: சேகர் (கடை உரிமையாளர்)
செய்தியாளர் : மணி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onion robbery in shop


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->