தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது ரயில் மோதி உயிரிழப்பு
One person killed in train collision
திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்கும் முயன்ற ஒருவர் மீது ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கிடையே, ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் முயன்று உள்ளார்.
அப்பொழுது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எஸ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரயில் மோதியதில் உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
One person killed in train collision